Tuesday, March 4, 2008

நீயும் மகாத்மா...



சேய்யுடன் பேருந்தில் ஏறிய
தாய்க்கு இடமளிக்கும் போது

பார்வையற்றவர் பாதையை கடக்க
நீ அவரது பார்வையாகும் போது

விபத்துக்குள்ளாகியவனை விநாடியில்
மருத்துவமனை சேர்க்கும் போது

முகம் அறியா மனிதனுக்கு
அகம் உவந்து இரத்ததானம்
செய்யும் போது

எங்கோ நடந்த பூகம்பத்தில்
இறந்த இழந்த மக்களுக்காக
இங்கு நீ மனமிரங்கும் போது

நம் நாட்டு போர் வீரர்களுக்காக
கண்களில் கண்ணீர் கசியும் போது

நீயும் மகாத்மா தான்...

No comments: