Friday, February 22, 2008

கல்லூரி...


சிந்தனையை சற்று பின்னோக்கி செலுத்துவோம்
முதன்முதலில் முகம் மலர
ஆகஸ்ட் 13ஆம் நாள் கல்லூரி நுழைந்தோம்
முதலாம் ஆண்டு மாணவர்கள் எனப்பட்டோம்

இனிமையான இரண்டாம் ஆண்டில்
இரண்டாம் ஆண்டு மாணவர்கள் எனப்பட்டோம்

சுற்றுலா சென்று சுகம் கண்ட மூன்றாம் ஆண்டில்
மூன்றாம் ஆண்டு மாணவர்கள் எனப்பட்டோம்

நமக்குள் உள்ள நட்பு இறுகி
நாட்கள் விநாடிகளாக கழிந்த நான்காம் ஆண்டில்
இறுதியாண்டு மாணவர்கள் எனப்பட்டோம்

இப்படி அடுத்தடுத்து எங்கள் முகவரி மாறியது
இறுதியாண்டின் இறப்பிற்கு பிறகு
எங்கள் கல்லூரியைப் பொருத்தவரை
முன்னாள் மாணவர்கள் என்ற முத்திரையே
எங்கள் முகவரியாய் நிலைத்திருக்கும் - எங்கள் நட்பைப் போல்

2 comments:

Unknown said...

Last two lines are saying about depth of friendship -- SUPER !!!

விஜய் said...

நன்றி வெற்றி.