சிந்தனையை சற்று பின்னோக்கி செலுத்துவோம் முதன்முதலில் முகம் மலர ஆகஸ்ட் 13ஆம் நாள் கல்லூரி நுழைந்தோம் முதலாம் ஆண்டு மாணவர்கள் எனப்பட்டோம்
இனிமையான இரண்டாம் ஆண்டில் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் எனப்பட்டோம்
சுற்றுலா சென்று சுகம் கண்ட மூன்றாம் ஆண்டில் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் எனப்பட்டோம்
நமக்குள் உள்ள நட்பு இறுகி நாட்கள் விநாடிகளாக கழிந்த நான்காம் ஆண்டில் இறுதியாண்டு மாணவர்கள் எனப்பட்டோம்
இப்படி அடுத்தடுத்து எங்கள் முகவரி மாறியது இறுதியாண்டின் இறப்பிற்கு பிறகு எங்கள் கல்லூரியைப் பொருத்தவரை முன்னாள் மாணவர்கள் என்ற முத்திரையே எங்கள் முகவரியாய் நிலைத்திருக்கும் - எங்கள் நட்பைப் போல்
இந்த நான்கு வருடமும் கல்லூரியில் உள்ள மரங்கள், சாலைகள், விடுதியறை, வகுப்பறை
நமக்குச் சொந்தமென்று இருந்தோம் இறுதியாண்டின் இறுதியில் தெரிந்தது அவை அடுத்த நான்கு வருடத்தில் வேறொருவருக்குச் சொந்தமென்று இனி என்று கிடைக்கும் வகுப்பறையின் வாசனை நுகரும் வாய்ப்பு இப்பொழுது உணர்கிறேன் உண்மையை
இந்த உலகில் மாற்றமொன்றே மாறாதது ஒன்றைத் தவிர - நமது நட்பு